Lyrics
பவனி செல்கின்றார் ராசா-நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
1.எருசலேமின் பதியே -சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
2.பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.
3.குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
Details
- Numeric ID
- 7109
- Song ID
- bavani-selgirar-rasa-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0