Lyrics
தம்தம்பூர சத்தத்தோடு கெம்பீர நடைபோடு
எக்காள தொணியோடு துதிபாடி நடனமாடு
தாகமுள்ள ஜனக்கூட்டமே
தண்ணீரால் நிரம்பிடுமே
வறண்டுபோன நிலங்களிலேயே
நீரோடை ஓடிடுமே
வாய் விட்டு சிரிப்போமே ஹைரோ ஹைரோ
நோய் விட்டு ஒடிடூமே ஹைரோ ஹைரோ
கர்த்தரோடு இருந்தாலே ஹைரோ ஹைரோ
மன்றாடி ஜெபித்தாலே ஹைரோ ஹைரோ
1.என் புத்தி எனக்கு திரும்ப வந்ததே நன்றி
அப்பா வீட்டை நினைக்க வைத்ததே நன்றி
முகக்கலையும் தேடி வந்ததே நன்றி
பரலோகத்தைப் புகழ வைத்ததே நன்றி
இருளுக்கு பதிலாக வெளிச்சத்தை பார்ப்பேன்
சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை பார்ப்பேன்
துன்பத்திற்கு பதிலாக இன்பத்தையே பார்ப்பேன்
அபிஷேக தைலத்தாலே ஆனந்தம் பார்ப்பேன்
2. என் மீட்பர் உயிரோடு இருப்பதாலே ஸ்தோத்திரம்
இரட்டிப்பான வல்லமை கிடைப்பதாலே ஸ்தோத்திரம்
இழந்ததெல்லாம் திரும்ப வருவதாலே ஸ்தோத்திரம்
காணாமல் போனதெல்லாம் கிடைப்பதாலே ஸ்தோத்திரம்
திரும்ப திரும்ப வனைந்திடுவார்
குயவனை போல தொட்டுத் தூக்கி அணைத்திடுவார்
தாயை போல தாங்கி தாங்கி சுமந்திடுவார்
தகப்பனைப் போல மேலும் மேலும் நிரப்பிடுவார்
அவரைப்போல
3. நான் தெரிந்துகொண்ட யெக்ஷீரனே பயப்படாதே
நான் தெரிந்தெடுத்த இஸ்ரவேலே பயப்படாதே
உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே
உனக்கு எதிரான பேச்சுகளும் நிற்காதே
இது சேனைகளின் கர்த்தருடைய வாய் மொழியே
இது யூதாவின் சிங்கத்துடைய வார்த்தைகளே
அந்நியரின் கண்களாலே இல்ல இல்ல
சொந்தமான கண்களாலே பார்ப்பேன் பார்ப்பேன்
Details
- Numeric ID
- 6501
- Song ID
- chairo-song-lyrics-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0