Lyrics
கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்
பாலன் இயேசு பிறப்பினாலே
பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட
மாசற்ற தேவன் பொன் மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்
1. நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலாய் சாயலாய் – பூலோகமதில்
வந்த நல் செய்தியை செய்தியை
வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே
எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்
2. தேவாதி தேவன் பிறந்த நல்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
அரிய பொன் வெள்ளைப் போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
பொன் பாதம் படைத்து வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே
Details
- Numeric ID
- 5376
- Song ID
- christmas-vantha-innalilae-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0