Lyrics
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை
கவலை நீங்குமே
என் சோக பாரம் தாங்குமே
நீரே என் தஞ்சமே
1. பாவம் செய்தேன் பாவியானேன்
பாதையை நான் மறந்தேன்
பாசக்கரத்தால் பாவம் கழுவி
பாசமாய் அணைத்தீரே
2. உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்
உள்ளதை எல்லாம் இழந்தேன்
உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து
உம்மிடம் சேர்த்தீரே
3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி
துடித்து தவிக்குதே
என்னை என்றும் ஏந்தி தாங்கும்
கிருபை நாதரே
Details
- Numeric ID
- 3724
- Song ID
- daevanae-neer-kannaokkum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0