Lyrics
தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
புத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க
நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்
நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்
புதிய நாளை தந்துவிட்டார்
அடைத்த வாசலை திறந்து விட்டார்
நான் சொல்றேன் நூறு சத்தம்
கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்
என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்
வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்
ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர்
2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து போனாயா
முடிவில் கர்த்தராலே சுதந்தரிப்பாய்
வெறுமை மாறி புது துவக்கம் ஆனது
தனிமை மாறி புது வாழ்வு பிறந்தது
3. அவமானம் என்னை சூழ்ந்தபோதிலும்
கர்த்தர் என்னை என்றும் விட்டு போகல
கண்ணீரும் காயங்களும் முடிவே இல்ல
கர்த்தர் கரம் துடைத்து தேற்றியது
Details
- Numeric ID
- 839
- Song ID
- deva-intha-naalil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0