Deva Kumarane Deva தேவ குமாரனே தேவ குமாரனே
தேவ குமாரனே தேவ குமாரனே
Lyrics
தேவ குமாரனே தேவ குமாரனே
பூமிக்கு வந்தனையோ ஆராரிரோ
தந்தையும் தாயையும்
சிந்தையிலே வைத்து
உந்தனை கண்டனையோ
1. மங்களம் பொங்கிடும்
தேவ ஜனங்களின்
வாழ்த்தொலி கேட்கிறதே
வந்தனம் சொல்லிடும்
ஞானியர் கூட்டத்தில்
தூபங்கள் மணக்கிறதே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தரே
என்றும் வணங்கிடுவேன்
2. சேற்றில் இருந்து என்னை வந்து
தூக்கி எடுத்த அன்னையே
தேவ குமரன் உன்னை தோளில்
சுமக்கும் அன்பையே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நீ தானே என் பிள்ளை
கண்பட்டு காயங்கள்
ஆகாத என் முல்லை
பூமியின் காவலனே
என் புண்ணிய பாலகனே
தாயினும் மேலாக
என் தந்தையின் நாயகனே
ராஜாதி ராஜனே
கர்த்தாதி கர்த்தரே
என்றும் வணங்கிடுவேன்
3. தாயன்பை தந்தவனே
பசி தாகங்கள் தீர்ப்பவனே
வேதங்கள் சொன்னவனே
வர்ண பேதங்கள் நீட்பவனே
வானதி வானுக்கும்
தேவாதி தேவன் நீ
இருள் பட்ட இடமெல்லாம்
ஒளியாக நிறைந்தாயே
தாழ்மையின் ருபத்தில் தான்
எங்கள் ஏழ்மையை பார்த்தவனே
வஞ்சனை செய்பவர் முன்
என் நிந்தையை தீர்த்தவனே
Details
- Numeric ID
- 3190
- Song ID
- deva-kumarane-deva-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1