Lyrics
தேவா உம் அன்பில் நான்
என்றும் வாழுவேன்
உம் தூய புகழ் சொல்லி என்றும் பாடுவேன்
என் உள்ளம் எந்நாளும் உம் ஆலயமே
அங்கே உம் பிரசன்னம் தங்கிடுமே
1. தாய்போல மடிமீதில் தாலாட்டி
என் மனப்புண்கள் மாற்றுகின்றீர்
கண்ணின் மணியாக நான் மாறவே
கண் இமையாகி காத்திடுவீர்
உம் போன்ற சொந்தம்
எனக்கில்லை-எங்கும்
என் வாழ்வில் நான் கண்ட ஆனந்தம் நீர்
2. உலகோரின் பகை அம்பு
என்னைத் தாக்கையில்
என் அரணாக மாறுகின்றீர்
கொடும் சாத்தான் பிணி
கொண்டு எனைத்தாக்கையில்
நல் மருந்தாகி காத்திடுவீர்
நீர் எந்தன் தஞ்சம்
எனக்கில்லை துன்பம்
எந்நாளும் வழி காட்டும் மேகஸ்தம்பம்
3. சிலுவை மடி மீது தலைசாய்த்து என்
கொடும் பாவம் மாற்றியதால்
கரம் காலில் நீர் ஏற்ற காயங்களால்
எம் துயர் யாவும் நீக்கியதால்
ஒரு கோடி பாடல் நான் ஏற்றி என்றும்
துதி பாடி பணிகின்றேன் வாழிய நீர்
Details
- Numeric ID
- 1182
- Song ID
- deva-um-anbil-naan-enrum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0