Lyrics
தேவா உன் நாமத்தைப் பாடிப் புகழுவேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்
ஆனந்தம் ஆனந்தமே
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றிப் பாடிப்போற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
அதிசய தேவன் நீரே
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
உத்தம தேவன் நீரே
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே
Details
- Numeric ID
- 3710
- Song ID
- deva-um-naamathai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0