Devaa Thirukkadaikkan Song Tamil Christian Keerthanai Song
Lyrics
தேவா திருக்கடைக்கண் பார் ஐயா
வினைதீர் ஐயா வினைதீர் ஐயா
கோவாய் உலகில் வந்த யோவா சச்சிதானந்தா
மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார் ஐயா ஸ்வாமி
பொல்லா உலகம் பகை எல்லாச் செல்வமும்
புகை வல்லா உனின் கிருபை கூர் ஐயா ஸ்வாமி
அந்தி சந்தியும் விடாமல் தந்திரப் பசாசடாமல்
எந்த விதமும் கெடாமல் ஆளுமே ஸ்வாமி
சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்
எப்படி அடிமை கரை யேறுவேன் ஸ்வாமி
எத்தனை துயர் அடைந்தேன் மெத்தவும் மன துடைந்தேன்
சித்தம் இரங்காய் என் மணவாளனே ஸ்வாமி
இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம் அனந்தனந்தம் ஸ்தோத்திரமே ஸ்வாமி
Details
- Numeric ID
- 6469
- Song ID
- devaa-thirukkadaikkan-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0