Lyrics
தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாறுவேன் -2
1. சிலுவையின் மறைவினில்
நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில்
ஆறுதல் கண்டேன்
தேனிலும் இனிய என் நேசரின்'
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
என் அகம் மறந்திடுவேன் என்றும் நான்
2. கார்மேகம் போல் என் பாவங்கள்
எல்லாம் மன்னித்தாய்
என் நாவிலே புதுப்பாடல்
தந்து தேற்றினாய்
குழியில் தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகற்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
3. கல்வாரியில் ஜீவன் தந்த
நேசர் இயேசுவை-அன்னை தந்தை
யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றியே
என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
Details
- Numeric ID
- 2539
- Song ID
- devane-en-anbane-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0