Lyrics
தீன தயாளா இயேசு நாதா
சேவையில் நீதியின் காவலனே
தினம் உம்மைப் பாடும் மனம் தாராய்
திருவருள் வாழ்வில் எனைச் சேராய்
1. மாபெரும் சீலனே
பேருபகாரனே
மாசில்லா கருணைதனை
வளர்த்திட்ட அருளரசே
வான் மழையாய் வந்தே எம்மையே
மகிழ்வுடன் என்றும் துயர் தீராய்
2. ஞான சிங்காரனே
ஏழை பங்காளனே
வானமும் வையகமும்
வணங்கிடும் திருவடிவே
வாழ்வில் உம்மை அன்பாய் பணிந்தே
மன துயர் நீக்கும் எழில் தாராய்
Details
- Numeric ID
- 3802
- Song ID
- dheena-dhayala-yesu-nadha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0