Lyrics
தேவ எக்காளம் தொனிக்கவே
தேவாதி தேவன் தோன்றுவார்
முன் மறைந்த அருமையானோர்
முதல் வருவார் இயேசுவுடன்
பின்பு நாமும் அண்ணலோடு
இன்பமடைவோம் என்றுமென்றும்
அன்பர்களோ ஆனந்தமாய்
இன்முகமே கண்டிடுவார்
மின்னல் போல இன்னல் தொலைய
இன்பமே இனி என்றுமென்றும்
பூரணரே பறந்திடுவார்
பொன்முடியும் தரித்திடுவார்
பாரிடத்தில் பாடு சகித்தோர்
பாடி முடிப்போம் என்றுமென்றும்
ஆயிரமாம் தூதர் சூழ
அடியாரும் அரசாள
அல்லேலுயா ஆர்ப்பரித்தே
ஆளுவோமே என்றுமென்றும்
ஆருயிரே ஆதரையில்
ஆண்டுகளோ கடந்திடுதே
என்று காண்பேன், எந்தனுள்ளம்
எண்ணி எண்ணி ஏங்கிடுதே
Details
- Numeric ID
- 2563
- Song ID
- dheva-ekkaalam-dhonikkavay-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0