Lyrics
தினமே நானுனைத் தேடிப்பணியச்
செயும்துணையே நித்ய ஏக தெய்வமே
மனநிலை தவறி மருகினேன் நானே
மாசிலானே அனுகூலநற் கோனே
அருள் நாயகனே அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
மருள்பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா
செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
முத்தேயென் நன்மைக் காக மரித்தாய்
மோதிய தீவினை யாவும் அழித்தாய்
திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
தீமை மறந்துநான் சீர்பெறக்கூராய்
கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்
Details
- Numeric ID
- 6472
- Song ID
- dinamae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0