Lyrics
எக்காள தொனியுடன் தூதர்களின்
பாட்டுகளோடே - எம்பெருமான்
இயேசு கிறிஸ்து வருவாரே-வானத்தில்
வந்து நின்று கடவுள் பிள்ளைகளை
பரலோகம் அழைத்து செல்வாரே
1. புத்தம் புது பூமியாம் புத்தம் புது வானமாம்
ஜீவ நதியில் குளிப்பனே - சூரிய
ஒளியுமில்லை இரவின் நிழலுமில்லை
தேவ மகிமையே ஒளியாமே வச்சிரக்கல்
இந்திர நீலம், சந்திர காந்தம், மரகதம்
கோமேதம், புஷ்பராகம், வைடூரியம்
பன்னிரண்டு கற்கள் அஸ்திபாரமாம்
2.தெருவெல்லாம் தங்கமாம் அதில் ஒடி
ஆடுவேன் - ஜீவ கனிகளை உண்டு
களிப்பேன் பாவத்தின் நிழலில்லை
வறுமையின் சாயல் இல்லை
கவலை சாபம் மரணம் இல்லையே
நோய் நொடி கண்ணீர் பொய் துன்பம்
இல்லையே - புதிய பாடல் பாடுவோம்
ஆனந்தமாய் வாழுவோம் என்றும்
எங்கள் தேவன் அருகினிலே
Details
- Numeric ID
- 1651
- Song ID
- ekkaala-thoniyod-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0