Elaelo Enru Sonnalae ஏலேலோ என்று சொன்னாலே
ஏலேலோ என்று சொன்னாலே
Lyrics
ஏலேலோ என்று சொன்னாலே
எங்க மக்க அயிலேசா போடறாங்கய்யா
ஏன்னா ஏசப்பா எங்க படகில் உண்டு
அதனால் எங்களுக்கு பயமே இல்லை ஐயா
ஏலேலோ அயிலசா
ஏலேலோ அயிலசா
ஏலேலோ அயிலசா
ஏலேலோ ஏலோயா
1. அலை வந்து மோதினாலும் கவலையே இல்லையே
புயல் வந்து அடிச்சாலும் பயமே இல்லையே
தண்ணீரில் நடந்த கால்கள் என்னோடு பயணம் செய்யும்
இயேசு என்னோடுண்டு எனக்கினி பயமே இல்லை
2. இரவெல்லாம் இரைதேடி விரயமானாலும்
கரையினில் இயேசு நிற்க கலக்கம் இல்லையே
தட்டினில் தூங்கும் தெய்வம் பட்டினியாய் விட்டு விடாரே
கொட்டு கொட்டி பாடிடுவேன் குறைவை நான் மறந்திடுவேன்
3. வெள்ளம் போல் சாத்தான் எதிரி வந்தாலும்
வல்ல நல்ல தேவன் உண்டு கலக்கமில்லையே
அக்கினியில் நடந்த கால்கள் அன்போடு வழி நடத்தும்
இயேசு என்னோடுண்டு எனக்கினி பயமில்லை
Details
- Numeric ID
- 225
- Song ID
- elaelo-enru-sonnalae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1