Lyrics
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்
1. தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை
2. அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே
3. தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே
4. குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே
Details
- Numeric ID
- 3849
- Song ID
- ellaavatrilum-ellaamumaaga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0