Lyrics
எல்லை இல்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே
மகா ராஜாவே என் இயேசையா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே
மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்துபோன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என் அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா
தாயைபோல தேற்றினத
எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையைபோல சுமந்தத
என்னனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடாத நேசமே
Details
- Numeric ID
- 6076
- Song ID
- ellai-illatha-um
- Views
- 1
- Downloads
- 1