Lyrics
எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்.
விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற,
செத்தவர் மீண்டுமே பிழைக்க,-உயர்
நித்திய ஜீவனை அளிக்கத்,-தேவ
பக்தர் யாவரும் களிக்க.
கருதிய காரியம் வாய்க்கத்,-தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க,-நம்
இரு திறத்தாரையும் சேர்க்க.
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக்,-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க,-இப்
பூவின்மீது சபை செழிக்க.
ஏதுந் தீவினை செய்யாத் தூயன்,-எப்
போதுமே நன்மைபுரி நேயன்,-தப்
பாது காத்திடும் நல்லாயன்.
Details
- Numeric ID
- 7200
- Song ID
- elunthar-iraivan-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0