Eluntharae En Manavaalan Song Lyrics எழுந்தாரே என் மணவாளன்
எழுந்தாரே என் மணவாளன்
Lyrics
எழுந்தாரே என் மணவாளன்
மரணத்தை வென்று விட்டார்
உயிர்த்தாரே இம்மானுவேலன்
சாபத்தை முறித்து விட்டார்
மன்னரிவர் மாம்சத்தினால்
மரணத்தின்மேல் ஜெயம் கொண்டார்
ஆதாமின் சாபத்தை
வேரோடயே நீக்கினாரே
அவரம்பின் ஆழத்தை
உலகிற்க்கே காட்டினாரே
என் ஜீவன் மீட்டிட மனிதனானார்
தன் ஜீவன் தந்தென்னை மீட்டுக்கொண்டார்
தேவா ஆட்டுக்குட்டியாக வந்தார்
தேவா நீதியை நிறைவேற்றினார்
உலகத்தின் பாவத்தை
சிலுவையில் சுமந்திட்டாரே
வேதத்தின் வாக்கெல்லாம்
நிறைவேற்றி உயிர்த்திட்டாரே
மனுஷ ரூபமாக காணப்பட்டார்
மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார்
தேவனோ அவரை உயர்த்தினாரே
எல்லா நாமத்திற்கும் மேலாகவே
சாத்தானின் சோதனை
ஜெயமாக மேற்கொண்டாரே
பாவமில்லை பிரதான
ஆசாரியராய் மாறினாரே
Details
- Numeric ID
- 7445
- Song ID
- eluntharae-en-manavaalan-song-lyrics
- Views
- 1
- Downloads
- 1