Lyrics
என் ஆவியை நான் ஊற்றிடுவேன்
உன் சந்ததியின் மேல் நான் ஊற்றிடுவேன்
என் ஆசீர்வாதம் நான் பொழிந்திடுவேன்
உன் பிள்ளைகள் மீதே நான் பொழிந்திடுவேன்
நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)
1. வல்லமை வரங்களைத் தந்திடுவேன்
ஆவியின் கனியால் நிரப்பிடுவேன்
எனக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
எனக்கு கனிகள் தந்திடுவாய்
2. நோய்கள் யாவும் விலக்கிடுவேன்
சந்தோஷ வாழ்வு நல்கிடுவேன்
பெலவீனம் யாவும் போக்கிடுவேன்
புது பெலன் உனக்கு தந்திடுவேன்
3. கையின் பிரயாசம் பெருகச் செய்வேன்
கடன் தொல்லை யாவும் நீக்கிடுவேன்
வறுமைவின் நாட்கள் முடிந்து விடும்
செழிப்பின் நாட்கள் வந்து விடும்
Details
- Numeric ID
- 1395
- Song ID
- en-aaviyai-naan-ootriduvaen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0