En Adaikalamae En Pugalidamae என் அடைக்கலமே என் புகலிடமே

என் அடைக்கலமே என் புகலிடமே

Lyrics

என் அடைக்கலமே என் புகலிடமே நன்றி நன்றியையா என் உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி ஐயா – 2 என் தேவன் என்றும் பெரியவரே என்னை நீர் நினைப்பதற்கு தகுதி ஏதும் இல்லையப்பா நிமிஷம் தோறும் விசாரிக்க என்மேல் அன்பு கூர்ந்திட தகுதி ஏதும் இல்லையப்பா ஆனாலும் நேசித்தீரே ஆனாலும் உயர்த்தினீரே – 2 நன்றி ஐயா – 2 1. அழுகையின் பள்ளத்தாக்கினிலே உருவ நடந்து சென்றோமே மேய்ச்சலுள்ள இடமாக்கி ஆடுகளாலே நிரப்பினீரே பள்ளத்தாக்குகள் எல்லாமே தானியத்தாலே மூடினீரே நன்றி ஐயா.. நன்றி ஐயா – 2 – என் உயிருள்ள 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் செழிப்பான தேசத்தில் கொண்டு வைத்தீர் வற்றாத நீரூற்றாய் மாற்றி ஐயா செழிப்பான தோட்டமாய் ஆக்கினீரே அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் சென்று ஆத்துமாவைத் தேற்றினீரே – நன்றி ஐயா 3. காற்றையும் மழையையும் பார்க்கவில்லை ஆனாலும் வாய்காலை நிரப்பினீரே அதிசயங்கள் காணச் செய்து இதயமெல்லரம் மகிழ செய்தீர் சத்துருக்களெல்லாம் முறியடித்து ஜெயத்தின் மேல் ஜெயம் தந்தீரைய்யா – நன்றி ஐயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3078
Song ID
en-adaikalamae-en-pugalidamae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1