Lyrics
என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கும் திடனான தேவன் நீரே
பெருவெள்ளத்தில் தப்பிக் கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிhலானோர் நீரே
மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே
புதிய தொன்று என்னிலே செய்திட நீரே
கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே
Details
- Numeric ID
- 1567
- Song ID
- en-devane-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0