Lyrics
பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே
என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே
ஆவியானவரே
ஆவியானவரே
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு
வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்
சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்
பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
Details
- Numeric ID
- 592
- Song ID
- en-hakkore-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1