En Jebathai Ketkiraar Song என் ஜெபத்தை கேட்கிறார்
என் ஜெபத்தை கேட்கிறார்
Lyrics
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார்
அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன்
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன்
வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும்
வருத்தம் துக்கம் பசியும் என்னை
நெருங்கவில்லையே
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே
வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும்
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே
கர்த்தர் கிருபை என்னைவிட்டு
விலகவில்லையே
கடலின் அலையில்
நான் பயணம் செய்தாலும்
காற்றும் புயலுமாய்
என்னை எதிர்த்து வந்தாலும்
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே
அத்திமரங்களின் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே
Details
- Numeric ID
- 6031
- Song ID
- en-jebathai-ketkiraar
- Views
- 1
- Downloads
- 1