Lyrics
என் கருவை உம் கண்கள் கண்டது
தாயின் கர்ப்பத்திலே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
என்னை நீர் கண்டீர் ஐயா
நன்றி ராஜா உமக்கு நன்றி ராஜா(2)
1. பிரமிக்கத்தக்கதாய் உண்டாக்கினீர்
உமது சாயலின்படி
நாசியில் சுவாசத்தை எனக்குத் தந்தீர்
சுகமாய் வாழும்படி
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை மறந்து எங்கே வாழ்வேன்
மனுஷனை நீர் நினைத்திட
எம்மாத்திரமையா
தேவதூதரில் சிறியனாய்
மகிமையில் முடி சூட்டினீர்
மண்ணான எனக்கு மகிமையாக
எந்நாளும் நீரே வாழ்கின்றீர்
3. குயவன் கையில் களிமண்ணாய்
கொடுத்தேன் ஆண்டவரே
எனது எதிர்கால திட்டங்களை
உம் கையால் எழுதி தாரும்
எனது உயர்வை பூமியிலே
நீர் மட்டும் பார்த்து மகிழ்கின்றீர்
Details
- Numeric ID
- 1375
- Song ID
- en-karuvai-um-kangal-kandathu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0