Lyrics
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து
வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர்
அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன்
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர்
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே
ஆராதனை
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர்
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர்
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை
Details
- Numeric ID
- 729
- Song ID
- en-meethu-yeano-iththanai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0