En Naavil Neer Thantha Varangal என் நாவில் நீர் தந்த வரங்கள்
என் நாவில் நீர் தந்த வரங்கள்
Lyrics
என் நாவில் நீர் தந்த வரங்கள்
எந்நாளும் உம்மைப் பாடும் ஸ்வரங்கள்
மன்னாவால் போஷித்த மன்னவரை
என் ஆன்மாவில் துதி பாடி போற்றிடுவேன்
எங்கும் அசைவாடும் தேவ தூய ஆவியே
என்றும் இசைபாடி எந்தன் உள்ளம் ஆளுமே
1. தன் உள்ளங்கையில்
என்னை வரைந்திருப்பார் - என் உள்ளம்
அதில் என்றும் நிறைந்திருப்பார் -2
தம் கிருபையின் வரங்களால் நிரப்பிடுவார்
தம் வருகையிலே என்னை அழைத்திடுவார்
எனக்காய் ஒரு பந்தி ஆயத்தமே
அதில் நானும் சேர்வது உம் சித்தமே
2. என் பெயர் சொல்லி
என்னை அழைத்திடுவார்
தன் மார்பிலே அன்பாய்
என்னை அணைத்திடுவார்
அவர் சிறகிலே என்னைக் காத்திடுவார்
நல் விடியல்கள் என் வாழ்வில் தந்திடுவார்
உமக்காய் ஊழியம் செய்திடவே
என் ஆத்துமா உம்மில் வாஞ்சிக்குதே
Details
- Numeric ID
- 7125
- Song ID
- en-naavil-neer-thantha-varangal-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open