Lyrics
என் நடைகளை ஸ்திரப்படுத்துமே
என் வழிகளை செம்மையாக்குமே
நான் அலையாதபடி நீர் ஆயத்தம் பண்ணினதை
சுதந்தரிக்க உதவிடுமே
இயேசுவே நீர் வேண்டுமே
உம் வழிகளை எனக்கு காண்பிக்க
இயேசுவே நீர் போதுமே
உம் பாதையில் என்னை நடத்திட
1. பயந்து போய் இருந்த என்னை நீர் கண்டு
பராக்கிரமசாலியே என்றழைத்தீர்
இருக்கிற பெலத்தோடே புறப்படு என்றீர்
உன்னோடே நான் உண்டு என்று சொன்னீர்
2. எத்தனாய் வாழ்ந்த என்னை நீர் கண்டு
யெஷூரனாய் மாற்ற திட்டம் வைத்தீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை நான் கைவிட மாட்டேன் என்றீர்
Details
- Numeric ID
- 424
- Song ID
- en-nadagalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0