Lyrics
என் நெஞ்சமே நீ கலங்காதிரு
உன் தேவன் செயல் படுகிறார்-2
நம்பிக்கையை சோதிக்கும் வாழ்வினிலே
எதுவும் நிலையென்றே நினைத்தாயோ
நிலை பரலோக்தின் வாழ்வினிலே
கி உன் பலன் உண்டென்றே மறந்தாயோ
1. தன்னைப் போல் பிறரை நேசிக்கும்
உன்னை தம் பிள்ளை என்றழைக்கிறார்
நீதி வழி செல்லும் உன் பாதை அறிவார்
கஷ்டம் நஷ்டம் சகிக்க சமாதான பிரபு அவரே
2. இதுவரை உன்னை நடத்தினவர்
இமைப்பொழுதும் உன்னை மறப்பாரோ
இதுவரை சுமந்து ஏந்தினவர்
இங்கில்லை என்றே திகைத்தாயோ
உன்னை தாங்கும் கரங்கள்
உன்னை காத்திட உறங்கா இமைகள்
உன்னை மீட்கவே தன்னையே ஈந்தவர்
இறைவா உமதன்பிற்கு நிகரில்லையே
உம்மை அனுதினம் தொழுதிடுவேன்
உம்மை அனுதினம் துதித்திடுவேன்
Details
- Numeric ID
- 1360
- Song ID
- en-nenjamae-nee-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0