Lyrics
என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா
எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன்
உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்
Details
- Numeric ID
- 6692
- Song ID
- en-nesar-neerthanaiya
- Views
- 1
- Downloads
- 1