Lyrics
என் சொந்தமே என் பந்தமே
என்னுடையவரே இயேசையா
உம்மைத் துதித்து பாடிட-ஆயிரம்
நாவுகள் போதாது போதாதையா -2
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
துதிகளில் வாசம் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
பரலோக வாழ்வு தந்தீரே -2
உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
உம்மை பாடாதிருப்பேனோ
உம்மை துதியாமல் இருப்பேனோ -2
2 ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
கொடுத்து உம் சாயலாக்கினீரே
இன்னும் அபிஷேகம் தந்திடுமே
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே
Details
- Numeric ID
- 1371
- Song ID
- en-sonthame-en-pantham-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0