En Ullan Kavarum Song என் உள்ளங் கவரும் நீர் மரித்த

என் உள்ளங் கவரும் நீர் மரித்த

Lyrics

என் உள்ளங் கவரும் நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும் இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன் சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட உந்தனடிதனில் உறைந்து தனித்து ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் என் தேவனே அதி நேசமாய் உம்முடன் இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம் அம்பரா மரண ஆழி தாண்டும் வரை அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான் இம்மையில் கூடியமட்டும் அறிந்திட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7384
Song ID
en-ullan-kavarum-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0