Lyrics
என் இயேசு சென்ற பாதையில்
அவர் காட்டும் மாதிரியில்
அவர் செய்யும் பிதாவின் சித்தம்
அல்லேலூயா நானும் செய்வேன்
அல்லேலூயா நானும் செல்லுவேன்
ஜெயக்கிறிஸ்து முன் செல்கிறார்
எனக்காக யாவும் செய்யவே
முசுக்கட்டை செடியின் தொனி
ஜெயம் ஜெயம் என்று கூறுது
துன்பங்கள் யாவும் நீக்குவேன்
தோளின் மேல் தூக்கி சுமப்பேன்
என்ற வாக்கு மாறிடாதவர்
அல்லேலூயா நம்பி செல்லுவேன்
அல்லேலூயா நானும் செல்லுவேன்
செங்கடலண்டை நிற்கிறேன்
சீறி வரும் பிசாசைக் காண்கிறேன்
முன்னே மோசே கோலிருப்பதால்
மோசமின்றி நானும் செல்லுவேன்
நாசமாகும் பிசாசைக் காணுவேன்
கானானின் கரை காணுது
காதலன் தொனி கேட்குது
காலம் இனி இல்லை ஆதலால்
களிப்பாக ஓடி சேருவேன்
கர்த்தர் அன்பை எண்ணிப் பாடுவேன்.
Details
- Numeric ID
- 3064
- Song ID
- en-yesu-sentra-paathaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0