Enakkakaka Yavarraiyum Seypavare P…

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
Unknown
Lyrics

Lyrics

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே எனக்காக யாவற்றையும் செய்ததினால் நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன் 1. பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார் பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார் பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில் அந்த பானையில் எண்ணெயும் மாவும் குறையவில்லை 2. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார் விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார் 3. என்னத்தை உடுப்போம் என்று கவலை வேண்டாம் ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை காட்டுப் புஷ்பத்துக்கு தேவன் உடுத்துவித்தால் அவர் நம்மையும் உடுத்துவிப்பதுண்மையல்லவா 4. நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம் – நாளைய தினத்திற்காக கவலைப்படும் அந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3994
Song ID
enakkakaka-yavarraiyum-seypavare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0