Lyrics
எந்தன் அடைக்கலம் நீர் தானே
எந்தன் புகலிடம் நீர் தானே
என்னை என்றும் காண்பவரே
எனது நிழலாய் இருப்பவரே -2
உமக்கே ஆராதனை
என்றுமே ஆராதனை
உமக்கே ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை -2
ஆபத்து ஒன்றும் அணுகிடாமல்
பாதுகாத்து நடத்திடுவார்
சத்துரு என்னை சூழ்ந்தாலும்
விடுவித்து என்னை காத்திடுவார் -2
2. உடைந்த உள்ளம் தேற்றிடுவார்
திட மனதை தந்திடுவார்
உன்னத ஆறுதல் எனக்களித்து
கிருபையால் என்னை நிரப்பிடுவார்
3. துயரமெல்லாம் போக்கிடுவார்
உயர எழும்ப செய்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்
கரம்பிடித்தவர் காத்திடுவார்
Details
- Numeric ID
- 1634
- Song ID
- endhan-ataikkalam-neer-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0