Enkuthe Ennakanthan Thuyar ஏங்குதே என்னகந்தான், துயர்

ஏங்குதே என்னகந்தான், துயர்

Lyrics

ஏங்குதே என்னகந்தான், துயர் தாங்குதில்லை முகந்தான் பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட ஓங்கியே உதிரங்கள் நீங்கியே துயர்கண்டு 1. மேசியாவென்றுரைத்து யூத ராஜனென்றே நகைத்து தூஷணித்தே அடித்து நினைக்குட்டி மாசுகளே சுமத்தி ஆசாரமின்றியே ஆசாரியனிடம் நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன் பேதுரு மறுதலிக்க சூதா யேரோதே மெய்க்க வெகு தீதாயுடை தரிக்க நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல் சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு 3. நீண்ட குரு செடுத்து, எருசலேம் தாண்டி மலையெடுத்து, ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல் வேண்டும் வசை கொடுத்து ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால் மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5257
Song ID
enkuthe-ennakanthan-thuyar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1