Enna Thaan Nadanthaalum Enthanin என்ன தான் நடந்தாலும் எந்தனின் வாழ்வில்
என்ன தான் நடந்தாலும் எந்தனின் வாழ்வில்
Unknown
Lyrics
Lyrics
என்ன தான் நடந்தாலும் எந்தனின் வாழ்வில்
தேவனை அறியாமல் நடந்திடுமோ
என்ன தான் தீங்கு எனக்கு வந்தாலும்
தேவனின் கண்கள் அதை காணாதோ
1. உன்னத அழைப்பால்
என்னையும் அழைத்தார்
உள்ளங்கையில் என்னை வரைத்தவராம்
தீயினில் நடந்தாலும்
தண்ணீரை கடந்தாலும்
நீதியின் தேவன் கிருபை அருள்வார்
2. கிருபையின் நிழலில் அரவணைப்பாரே
திருசித்தம் என்னில் நிறைவேற செய்திடுமே
வேதனை துன்பங்கள்
பாதையை அமைத்தாலும்
சோர்ந்தழியாது கரம் கொண்டு எடுப்பார்
3. சோதனை முடிவில்
பொன்னாக விளங்குவான்
ஸ்தோத்திரங்கள் சாற்றி
ஜெபத்தை செய்திடுவேன்
தேவனின் அன்பை விட்டு
பிரிக்கவும் முடியாதே
தேவனின் சாயலை
அடைந்தே வாழ்ந்திடுவோம்
Details
- Numeric ID
- 2962
- Song ID
- enna-thaan-nadanthaalum-enthanin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0