Lyrics
என்னை ஜீவ பலியாக
என் தேவா படைக்கிறேன்
எந்தன் உள்ளத்தை முழுவதுமாக
தேவா கொடுக்கிறேன்
நான் அல்ல நீரே என் வாழ்க்கை
இனிமேலே உம் சித்தம் செய்ய
காத்திருப்பேன் சிலுவையின் கீழே
1. ஆசை என் இச்சை யாவையும்
சிலுவையில் அறைந்து விட்டேன்
உலகை என் முதுகின் பின்பாக
நானும் எறிந்து விட்டேன்
மண் சிலுவையை முன்வைத்து
என் தேவா பாதையில் ஓடிடுவேன்
சோர்ந்திடும் போதெல்லாம் என் தேவா
அதினால் பெலனடைவேன்
2. தோன்றி பின் மறையும்
புகையை போல வாழ்க்கை
உதிரும் புல்லின் பூவைப்போல
உலகின் வாழ்க்கை
இந்த உலகின் வாழ்க்கையின் மேல்
என் தேவா ஆசை வைத்திருந்தேன்
உம்மை கண்டபின்னே என் ஆசையை
சிலுவையில் அறைந்து விட்டேன்
Details
- Numeric ID
- 1263
- Song ID
- ennai-jeeva-paluyaga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0