Lyrics
என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே
என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே (2)
எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே (2)
நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் (2)
1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
உனக்கு தருவேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாது என்றவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
3. போக்கிலும் வரத்திலும் என்னோடு இருந்து
பாதுகாப்பேன் என்று சொன்னவரே (2)
சொன்னதை செய்யும் வரையில்
என்னை கைவிடவேமாட்டீர் (2)
Details
- Numeric ID
- 2362
- Song ID
- ennai-peruga-seiven-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0