Ennaiyaalum Inpa Naathanae என்னையாளும் இன்ப நாதனே
என்னையாளும் இன்ப நாதனே
Lyrics
என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே
துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே
1. மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்
2. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
முரடான காடுகள் முள் கல் பாதைகள்
அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே
3. கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே
Details
- Numeric ID
- 8122
- Song ID
- ennaiyaalum-inpa-naathanae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open