Lyrics
என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்
1. ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே
2. ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே
3. எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன்
4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில்
Details
- Numeric ID
- 2917
- Song ID
- ennaiye-koduthen-unakkaai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0