Ennaiyum Umathaadin Song என்னையும் உம தாட்டின் மந்தையோ
என்னையும் உம தாட்டின் மந்தையோ
Lyrics
என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும் யேசுவே
வன்னியான தோர் அலகைப் பேய் தனை
வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்து
இந்நிலத்தினில் வந்துதித்த நல்
ஏசுவே எனைச் சேர்த்திடும்
ஜயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட மனம் உகந்து கோன் அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே எனைச் சேர்ந்திடும்
வாசலாகவே இருக்கிறேன் எனால்
வந்தவன் மனம் நொந்திடான் வெகு
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே எனைச் சேர்ந்திடும்
நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என்
நாதனே ஞான போதனே ஜீவ
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும்
மேய்ப்பராகவே இருக்கிறீர் எந்தம்
மேய்ச்சலும் நீர் தாமலோ ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும்
Details
- Numeric ID
- 7383
- Song ID
- ennaiyum-umathaadin-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0