Lyrics
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்
2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்
3. எல்ரோயீ என்னை காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே
கருமுதலாய் என்மேல் கண் வைத்து
நன்மைகள் செய்பவரே
ஆகாரின் கண்ணீரை மாற்றினவர்
என் கண்ணீர் மாற்றிடுவார்
Details
- Numeric ID
- 2954
- Song ID
- ennal-ontrum-koodathentru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0