Lyrics
என்னாலுரைக்க முடியாதே என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
தேற்றினார் அகத்தினை
காட்டினில் அலைந்த ஆடுநானே எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே இனி
வியந்து விரைந்து பாடுவேனே
நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்
பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே பாவப்
பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
ஆவல் ஆசையும் அகற்றினாரே தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்
சத்துருவினால் விளைந்த கோட்டை எல்லாம்
தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேனே இனி
ஆசை மிகும் யேசு பெருமானே பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே
வாச லீலிப்பீவே சீவதேனே வான
மன்னாவே இலங்கு கதிரோனே
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம்
Details
- Numeric ID
- 6019
- Song ID
- ennaluraikka-mudiyade
- Views
- 1
- Downloads
- 1