Lyrics
என்னோ பல நினைவாலும்
நீ உன்னை அலைக்கழிப்பாய்.
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின்
மன்னவராய் இருக்கையிலே.
அன்னை யிடத்துருவாய் உன்னை
அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும்
ஆகாரமும் உடையும் ஜீவனும்
அளிப்பதவர் அல்லவோ?
மாதானவள் சேயை ஒரு
வேளை மறந்தாலும் – உன்னை
மறவோம் ஒருகாலும் என
வார்த்தை கொடுத்தாரே
இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர்
என நினையேல் – அவர்
நிசமாக உன் வல பாகத்தில்
நிழல் ஆவர் என்றறிவாய்
சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன்
தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் -தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன்
என்ற திவ்ய உரையும் பொய்யாமோ?
தேகமும் கெட்ட உலகமும் பேயும்
திரண்டு நினைப் பொருதாலும் – அதை
ஜெயித்த யேசு நின் மன்னவ
ராகையில் சிந்தனை வேறென் நினைக்கு?
தேவ பிதா நின் பிதாவும் இயேசு
நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன்
தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும்
தேவை நினக் கொன்றும் இல்லையே.
Details
- Numeric ID
- 7387
- Song ID
- enno-pala-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0