Enthan Iruthayam Neer எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
Lyrics
எந்தன் இருதயம் நீர் அறிந்துகொள்வீரே
எந்தன் சிந்தனை நீர் சோதித்து அறிவீரே
வேதனை வழி உண்டோ என்று பார்ப்பீரே நீர்
நீத்திய வழியிலே நடத்துவீரே
1. வானத்திலே ஏறினாலும்
அங்கே இருக்கிறீர்
பாதாளத்திலே படுக்கைப் போட்டால்
அங்கும் இருக்கிறீர்
உம் பார்வைக்கு மறைவாய்
நான் எங்கே போவேன்
உம் சமுகம் விட்டு எங்கு ஓடுவேன்
இருளிலே மறைந்தாலும் வெளிச்சமாகுமே
சமுத்திரத்தில் தங்கினாலும்
உம் கரம் பிடிக்குமே
என் வழிகள் எல்லாம் தெரியும் உமக்கு
ஆச்சரியமே இந்த அறிவு எனக்கு
2. கர்த்தாவே என்னை நீர்
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவுகளை தூரத்திலிருந்து
அறிந்து கொள்கிறீர்
என் நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
கர்த்தாவே நீர் எல்லாம் அறிகின்றீர்
நீர் எந்தன் உள்ளிந்திரியம்
கைக்கொண்டிருக்கிறீர்
எந்தன் தாயின் கர்ப்பத்தில்
என்னைக் காப்பாற்றினீர்
என் கருவை உந்தன் கண்கள் கண்டது
அதிசயம் நான் உண்டாக்கப்பட்டது
Details
- Numeric ID
- 6837
- Song ID
- enthan-iruthayam-neer-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open