Lyrics
எந்தன் இதய கானம்
என்றும் உம்மை பாடும்
இயேசுவே என் தலைவனென்று
எங்கும் எடுத்துக்கூறும்
காலையில் பண்பாடும் பறவை கூட்டங்கள்
சோலையில் நின்றிடும் மரத்தின் கூட்டங்கள்
மாலையில் என் மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
2 தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பென்றாகும் தெய்வ மாந்தரும்
கோவிலில் நின்றோங்கும் புகழ்ச்சி பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
எல்லாம் உம் புகழ் பாடுதே
உம் சொல்லாலே உயிர் வாழுதே
Details
- Numeric ID
- 1631
- Song ID
- enthan-ithaya-ganam-endrum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0