Lyrics
எந்தன் கன்மலையே
எந்தன் கோட்டையுமே
என்னைக் காக்கின்ற தேவன் நீரே
எந்தன் கேடகமே அடைக்கலமே
எந்த என்னை இரட்சிக்கும் தேவன் நீரே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லையே
மரண அலைகள் என்னை
சூழ்ந்து கொண்டாலும் கலங்கிடேனே
உம்மை நோக்கிக் கூப்பிட்ட வேளையில்
பதில் தந்தென்னை காத்தவரே
என் சத்தம் கேட்டு இறங்கி வந்தவரே
என்னை மீட்ட நல் மீட்பரே
2. சத்துரு சேனை எனக்கெதிராக
வந்தாலும் அஞ்சிடேனே
எதிரி பெலவானாய் தோன்றினாலும்
நான் தயங்கிடேனே
சேற்றில் நின்ற என்னை மீட்கவே
சிலுவையிலே மரித்தீரே
பாவம் போக்கி பாரம் நீக்கியே
கரை சேர்த்த என் கர்த்தரே
3. உம்மாலே நானொரு சேனைக்குள்
பயமின்றி பாய்ந்திடுவேன்
உந்தன் தயவாலே தடையின்றி
திகையாமல் மதிலையும் தாண்டிடுவேன்
என்னை உமது சிறகால் மூடியே
பாதுகாக்கும் என் தேவனே
உந்தன் வழியே சிறந்த பாதையே
வழி நடத்தும் என் இயேசுவே
Details
- Numeric ID
- 1623
- Song ID
- enthan-kanmalaiye-enthan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0