Lyrics
எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி
சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே
ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன்
1. நோயின் கொடுமையிலே ஓ
மரண படுக்கையிலே ஓ
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து
கலங்கி தவித்த நேரத்திலே இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே
2. எதுக்கும் உதவாத ஒ
குப்பை நான் ஐயா ஓ
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே
3. சிரித்தபோதெல்லோரும் ஓ
கூட சிரித்தனரே ஓ
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே
Details
- Numeric ID
- 4152
- Song ID
- enthan-nenjam-ellam-nandri-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0