Lyrics
எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்
1. நேசர் தேசமதில்
என்றும் பேரின்பமே
கண்ணீரெல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே --- எந்தன்
2. சாவின் கூர்மை யாவும்
அழிந்து ஒழிந்ததே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரை கண்டிடுவேன் --- எந்தன்
3. வீதி பொன் மயமே
பாடியே மகிழுவேன்
இராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே --- எந்தன்
4. ஜீவ தண்ணீரினால்
தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன் --- எந்தன்
5. தேவ அன்பதுவே
நெருக்கி ஏவிடுதே
பிரிக்கவோ ஏதுமில்லை
அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்
Details
- Numeric ID
- 4146
- Song ID
- enthan-vanjai-paralogame-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0